கேப்டன் பிரபாகரன்’ டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு
“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம்
“கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல்
“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் கொடுத்த வாக்குறுதி
“நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன்” ; நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி
“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” ; கண்கலங்கிய ஆர்.கே.செல்வமணி
“கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும்” ; மன்சூர் அலிகான் கலாட்டா பேச்சு
“கேப்டன் பிரபாகரன் எனக்கு கொடுத்த வெற்றியால் அடுத்த பத்து வருடத்திற்கு எனக்கு வாய்ப்புகள் குவிந்தன” ; ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம்.
‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புத இன்ஸ்பிரேஷன் அதில் நிறையவே தெரிகிறது. படத்தில் மட்டுமல்ல உழைப்பில், நேர்மையில், குணாதிசயத்தில் கூட ஆர்,கே செல்வமணி பிரம்மாண்டமானவர். விஜயகாந்தின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு மிக முக்கியமான படம் என்றால் கேப்டன் பிரபாகரனுக்கு முன்பு கேப்டன் பிரபாகரனுக்கு பின்பு என்று சொல்லும் விதமாக இதை இயக்குனர் செல்வமணி கொடுத்திருந்தார்” என்று பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,“ரம்யா கிருஷ்ணன் படத்தில் ரிலீசின் போது பார்த்ததை விட இப்போது இன்னும் இளமையாக இருக்கிறார். ஒருவேளை எனக்கு வயதாகிறதோ என்னவோ ? எத்தனையோ படங்கள் நடித்தாலும் இந்தப் படம் தான் மன்சூர் அலிகான் பேர் சொல்லும் படம். இந்த படத்தின் மூலம் கேப்டனும் கிடைத்தார். பிரபாகரனும் கிடைத்தார். மீண்டும் செல்வமணியை ஒரு இயக்குனராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. ஆர்கே செல்வமணி என்றால் ஆளுமை. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வளரும் காலகட்டத்தில் புது இயக்குனர்களுக்கு படம் கொடுப்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகு வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள்.
விஜயகாந்த் மட்டும் 150 படங்களில் 150வது படத்தில் கூட புதிய இயக்குநரை அறிமுகப்படுத்தினார். நமது வெற்றி நமக்கு பயன் தருவதை விட ஒருவரை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் விஜயகாந்த். அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சென்று சந்திக்கலாம்.. தடை இருக்காது.. இந்த காலகட்டத்தில் தமிழில் இது போன்ற படங்களை எடுக்க முடியுமா என்று நினைத்த காலத்தில் இப்படி ஒரு படத்தை கேப்டனும் செல்வமணியும் இணைந்து கொடுத்தார்கள். இந்த படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து செல்வமணியின் புதிய இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்.
கேப்டனின் கலை உலக வாரிசாக சண்முக பாண்டியனும் அரசியல் வாரிசாக விஜய பிரபாகரனும் அவரைப் போலவே வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குனர் எழில் பேசும்போது,
“இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது புஷ்பா டிரைலர் போல இருந்தது. 35 வருடம் கழித்து இந்த படம் வெளியாகிறது என்றால் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்தின் வெற்றி. கேப்டனின் படங்களில் காலம் கடந்து நிற்கும் பல படங்களில் முக்கியமான படம் இந்த கேப்டன் பிரபாகரன். விரைவில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று பேசினார்.
நடிகர் சிங்கம் புலி பேசும்போது,
“கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நடந்த போது மலைப்பகுதியில் இருந்து அந்த படத்தின் படப்பிடிப்பை ஓடி ஓடி பார்த்தேன். கேப்டன் போட்ட சாப்பாடு தான் என்னை சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல விடாமல் இங்கேயே தங்க செய்து இயக்குநராக மாற்றியது.
ஒரு முறை கேப்டனை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். என்னை அழைத்து யார் என்று கேட்டபோது சுந்தர் சியின் உதவி இயக்குனர் என்றேன். நீயும் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டார்.. சார் உங்களை வைத்து நான் படமே வேண்டும் என்று கேட்டேன். அப்போது ஆச்சரியமாக பார்த்துவிட்டு போய்விட்டார். ஆனால் மாயாவி படத்தில் அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்” என்று கூறினார்.
நடிகர் ரவிமரியா பேசும்போது,
“எனுடைய 28 வருட திரையுலக வாழ்க்கையில் 20 வருடங்களை இயக்குனர் ஆர்.கே செல்வமணிவுடன் தான் கழித்துள்ளேன். 28 வயதிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படம் பண்ணியிருக்கிறார் என்றால் இன்றைய இயக்குனர்களுக்கு உண்மையிலேயே அது சவால் விடும் விஷயம். இன்று நாம் பார்த்து வியக்கின்ற இயக்குனர்களை விட எல்லாம் 35 வருடங்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய முத்திரையை பதித்தவர் ஆர்.கே செல்வமணி. கேப்டன் விஜயகாந்த் மனிதராகப் பிறந்து மனித தெய்வம் ஆனவர். இது புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் மட்டுமே” என்று கூறினார்
நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,
“புரட்சி கலைஞரின் நூறாவது படத்தில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் இந்த படத்தில் நடிக்கும் போது நிஜமான வீரப்பனின் முகம் எப்படி இருக்கும் என்று வெளி உலகத்திற்கு தெரியாது. சாலக்குடி படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே செல்வதற்காக ராவுத்தர் தனி பாதையே போட்டு கொடுத்தார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை சரண்யா தான்.. ஆனால் இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து யானை, பாம்பு என வன மிருகங்களை பார்த்ததும் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டாராம்.
இயக்குனர் ஆர்.கே செல்வமணி லொக்கேஷன்களை கண்டுபிடிப்பதற்காக நடந்து கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும். காலையிலிருந்து வசனமே இல்லாமல் என்னுடைய காட்சிகளை எடுப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் சென்னையில் இருந்து டயலாக் பேப்பர் விமானம் மூலமாக, கார் மூலமாக வரும், அதற்குப் பிறகு பக்கம் பக்கமாக பேச வைத்து எடுப்பார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மறக்க முடியாதது. அதை படமாக்கிக் கொண்டிருந்த கடைசி நாளில் தான் தம்பி விஜய பிரபாகரன் பிறந்தார். அதேபோல படத்திலும் சென்டிமென்டாக ரம்யா கிருஷ்ணனுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாட்கள் அனைத்துமே மறக்க முடியாதவை” என்று கூறினார்.
இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும்போது,
“என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான். புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது.
அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.
இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.
இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.
இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.
விஜய பிரபாகரன் பேசும்போது,
தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏகனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.