மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். —இயக்குனர் பேரரசு!

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

—இயக்குனர் பேரரசு!

அசிங்கவாதிகளாக

சில அரசியல்வாதிகள்!

அவர்களின் பேச்சில்

விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது!

சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது,

ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு

கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!

ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.

இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்!