“யார்” பட இயக்குனர் சக்தி சுப்பிரமணியம் எழுதி-இயக்கும் இணையதள குறுந்தொடர்

“யார்”   பட புகழ் இயக்குனர்  சக்தி சுப்பிரமணியம் எழுதி-இயக்கும் இணையதள குறுந்தொடர்

ஈகல் விசன் விசுவல் மீடியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இனையதள குறுந்தொடரை , “யார் (1985) “ , “கண்ணே கனியமுதே (1986)” போன்ற பிரபல படங்களை இயக்கிய , திரு.சக்தி சுப்ரமணியம் அவர்கள் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவிருக்கிறார்.

இதற்கான பூஜை, தமிழ்ப்புத்தாண்டு (14.4.2024) அன்று இனிதே நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்ட நடிகர்கள் நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நிர்வாகத் தயாரிப்பாளர் திரு.ஜெகன் மற்றும் தயாரிப்பு மேலாளர் திரு. “ஆஸ்கர்” பிரசாத் முன்னிலையில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.